Saturday 23 May, 2009

நூலைப் போல சேலை..(47)

மக்களவைத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடத்தில் கூட வெல்லாமல் தோல்வியடைந்தார் தேமுதிக தலைவர் விஜய்காந்த் .

அதே போல தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முதல் நாள் வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் விஜயகாந்த்தின் மூத்த மகன் பிரபாகரனும் தேர்ச்சி பெறவில்லை.

இதனால் அப்செட் ஆகி விட்டாராம் கேப்டன் . இதையடுத்து அவருக்கு நியமிக்கப்பட்ட டியூஷன் ஆசிரியரை அழைத்து கடிந்து கொண்டாராம்.


Thanks : Thatstamil.com

Thursday 21 May, 2009

நாட்டு நடப்பு.. (46)

நரேஷ் குப்தா மாடு மேய்க்க தான் லாயக்கு - ராமதாஸ் தாக்கு

***

இந்த தேர்தலின் போது 2 இடங்களில் வாக்குப்பதிவுக்கு முன்பதாக அதிகாரிகள் ஓட்டு போட்டு சோதனை செய்தனர். அப்போது ஒருவருக்கு போட்ட ஓட்டு மற்றவருக்கு விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 2 இயந்திரங்களையும் உடனே மாற்றிவிட்டனர்.

- நரேஷ் குப்தா வாக்குமூலம்

(அப்படீன்னா ஜெ. சொன்னது உண்மைதானா? அப்படியெல்லாம் நடக்கவே வாய்ப்பில்லைன்னு பீலா விட்டானுங்க!)

***
தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சரவையில் ஆப்பு

அகதி முகாமில அந்தாளை தள்ளுங்கப்பா(45)

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் சிறப்புப் பிரதிநிதியாக கொழும்பு வந்துள்ள விஜய் நம்பியார், இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக இலங்கை அரசு அமைத்துக கொடுத்துள்ள முகாம்களில் சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக பாராட்டித் தள்ளியுள்ளார்.

போர் முனையில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காக பான் கி மூனால் சில நாட்களுக்கு முன்பு கொழும்புக்கு அனுப்பப்பட்டிருந்தார் விஜய் நம்பியார். ஆனால் இவர் வந்து சேருவதற்குள்ளாகவே (நியூயார்க்கிலிருந்து நேராக கொழும்புக்கு வராமல் இடையி்ல் டெல்லி சென்று விட்டு கொழும்புக்கு வந்தார் விஜய் நம்பியார்) வன்னிப் பகுதியில் அனைத்தையும் முடித்து விட்டது இலங்கை ராணுவம் .

இந் நிலையில், மாணிக் பார்ம் பகுதியில் உள்ள இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களை விஜய் நம்பியார் பார்வையிட்டார்.

அப்போது இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நல்வாழ்வு நடவடிக்கைகள், பிற திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாராம்.

அப்போது முகாம்களில் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக பாராட்டு தெரிவித்தாராம் விஜய் நம்பியார்.

விஜய் நம்பியாரின் சகோதரர்தான் சதீஷ் நம்பியார். இவர் ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தனே இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை சென்ற இந்திய அமைதி காக்கும் படையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் என்பது நினைவுகூறத்தக்கது.

செய்தி நன்றி : thatstamil.com

****

இந்தாளை ஒரு வாரத்துக்கு அகதி முகாமிலே உட்கார வெச்சு சாப்பிட்டு தூங்க சொல்லுங்கப்பா. அதான் நல்லா இருக்குன்னு அவரே சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காரே!

சாவே! உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ?(44)

சீரிய நெற்றி எங்கே?
சிவந்தநல் இதழ்கள் எங்கே?
கூரிய விழிகள் எங்கே?
குறுநகை போன தெங்கே?
நேரிய பார்வை எங்கே?
நிமிர்ந்த நன்நடைதான் எங்கே?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்ததிங்கே

அம்மம்மா என்ன சொல்வேன்
அண்ணலைத் தீயிலிட்டார்
அன்னையைத் தீயிலிட்டார்
பிள்ளையைத் தீயிலிட்டார்
தீயவை நினையா நெஞ்சைத்
தீயிலே எரிய விட்டார்
தீய சொல் சொல்லா வாயை
தீயிலே கருகவிட்டார்.

பச்சைக் குழந்தை
பாலுக்குத் தவித்திருக்க
பெற்றவளை அந்தப்
பெருமான் அழைத்து விட்டான்
வானத்தில் வல்லூறு
வட்டமிடும் வேளையிலே
சேய்க் கிளியைக் கலங்கவிட்டு
தாய்க் கிளியைக் கொன்றுவிட்டான்


சாவே! உனக்கொரு நாள்
சாவு வந்து சேராதோ
சஞ்சலமே! நீயுமொரு
சஞ்சலத்தைக் காணாயோ
தீயே! உனக்கொரு நாள்
தீ மூட்டிப் பாரோமோ
யாரிடத்துக் போயுரைப்போம்?
யார் மொழியில் அமைதி கொள்வோம்?
யார் துணையில் வாழ்ந்திருப்போம்?
யார் நிழலில் குடியிருப்போம்?

வேரோடு மரம் பறித்த
வேதனை எம்மையும் நீ
ஊரோடு கொண்டு சென்றால்
உயிர்வாதை எமக்கிலையே
நீரோடும் கண்களுக்கு
நிம்மதியை யார் தருவார்
தலைவன் இல்லா நாட்டினை
நினைவில் யார் வைத்திருப்பார்?

ஐயையோ காலமே
ஆண்டவனே எங்கள் துயர்
ஆறாதே ஆறாதே
அழுதாலும் தீராதே

கை கொடுத்த நாயகனை
கைப் புறத்தே மறைத்தாயே
கண் கொடுத்த காவலனைக்
கண் மூட வைத்தாயே
கண்டதெல்லாம் உண்மையா
கேட்டதெல்லாம் நிஜம்தானா

கனவா கதையா
கற்பனையா அம்மம்மா
தலைவனா மறைந்தார், இல்லை!
நேர்மைக்குச் சாவே இல்லை!
அழிவில்லை முடிவுமில்லை
அன்புக்கு மரணமில்லை
இருக்கின்றார் தலைவன்
இங்கே தான்!
இங்கே தான்!

எம்முயிரில் - இரத்தத்தில்
இதயத்தில் நரம்புகளில்
கண்ணில் - செவியில்
கைத்தலத்தில் இருக்கின்றார்
எங்கள் தலைவன்
எமைவிட்டுச் செல்வதில்லை
என்றும் அவர் பெயரை
எம்முடனே வைத்திருப்போம்
அம்மா.... அம்மா.... அம்மா....


நன்றி : விகடன் & கவியரசு கண்ணதாசன்

(சற்றே மாற்றம் செய்யப்பட்டது)

Tuesday 5 May, 2009

தமிழினத் தலை - பெயர் மாற்றம் (43)

தனக்குத் தானே 'தமிழினத் தலை'ன்னு பெயர் வைத்துக் கொண்ட பெரிசின் பெயரை இப்போது உலகமெங்கும் உள்ள தமிழர்கள் இப்படித் தான் உச்சரிக்கிறார்கள்.

- தமிழீனத் தலைவன் (தமிழ் ஈனத் தலைவன்)

உனக்கு வந்தா ரத்தம், எனக்குன்னா மட்டும் தக்காளிச் சட்னியாடா? (42)

"என்னோட நைனாவுக்கு உடம்பு சரியில்லன்றத அந்தம்மா நையாண்டி பண்ணுது" என்று ஒரு ஆள் ஊர் முழுக்க புலம்பி வருகிறார்.

எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் இருந்த போது இவரோட நைனா இங்கே என்னவெல்லாம் கதை அளந்தார். அப்போது 'பொது வாழ்வில்' இருந்ததாக இருந்த இந்த நபர் என்னத்த புடுங்கிக் கொண்டிருந்தார். 'நைனா, நைனா, தமிழ்ப் பண்பாட்டின்படி நாம் அப்படியெல்லாம் பேசக்கூடாது' என்று அட்வைஸ் செய்திருக்க வேன்டியது தானே?

வடிவேலு சொல்ற மாதிரி, 'உனக்கு வந்தா ரத்தம், எனக்குன்னா மட்டும் தக்காளிச் சட்னியாடா?'

Sunday 26 April, 2009

தட்சிணாமூர்த்தியின் நகைச்சுவை உண்ணாவிரதம் (41)

"தலைவரே, மோசம் போயிட்டோம்"

"என்னய்யா அது?"

"உளவுத் துறை ரிப்போர்ட்படி நமக்கு நாப்பதுலயும் நாமம் தானாம்"

"என்னய்யா சொல்ற?"

"ஆமாம். சாதாரணமாவே நம்ம ஆட்சி மேல மக்களுக்கு ஏகக் கடுப்பு. கடைசியா இலங்கை பிரச்னை வேற இப்போ ரொம்பவே ஆட்டிப்படைக்குது"

"இப்படி ஆவும்னு முன்னமே தெரிஞ்சிருத்ந்தா 'நாங்க ஆட்சிக்கு வந்தா தனி ஈழம் அமைய ஆதரவளிப்போம்னு' சொன்ன ஆண்டிப் பண்டார கட்சிக்கிட்ட ஓடியிருக்கலாமேய்யா"

"ஹூம். டூ லேட் தலைவரே. அந்தம்மா தானாவே அந்த அறிக்கையெல்லாம் விட்டுடிச்சி. நீங்க என்னடான்னா 'நண்பரு. துரோகி, போராளி, பெருச்சாளின்னு' காமெடி பண்ணிட்டு இருக்கீங்க. நீங்க பண்ற காமெடியினால வடிவேலுவுக்கு இப்போவெல்லாம் படத்துலே சான்ஸே கெடைக்கலயாம். எப்பவும் ஆட்சி போனப்புறம் படத்துக்கு வசனம் எழுதுறேன் பேர்வழின்னு படுத்தி எறிவீங்க. இனிமே காமெடியனா நடிங்க. சூப்பரா பொருந்திடும்"

"என்னய்யா செய்யலாம்?"

"பேசாம கூட்டணியில இருந்து வெளில வந்திடுங்க. ரெண்டு மூணு சீட்டாவது ஜெயிக்கலாம். புள்ள, பேரனெல்லாம் டெபாசிட் காலியானா நல்லாவா இருக்கும்?"

"இனிமே வர முடியாதேய்யா"

"உங்களுக்கா தெரியாது? உண்ணாவிரதம் இருக்கேன்னு உட்காந்திடுங்க. அவங்களாவே தொறத்திடுவாங்க. 'ஐயையோ.. கொல்றாங்களே'ன்னு சவுண்டு விட்டுக்கலாம்"

"சூப்பர் ஐடியாய்யா. வாழ்க்கையிலயே இப்போ தான் உருப்படியா ஒரு யோசனை சொல்லிருக்க"

'ஐயையோ கொல்றாங்களே.. ஐயையோ கொல்றாங்களே' - சப்தத்தைக் கேட்டு உடனடியாக இத்துப் போன டி.வி & பேரன் டி.வி.களில் 'அராஜக மத்திய அரசு அட்டகாசம்' என்று செய்தி ஓடுகிறது.

Wednesday 22 April, 2009

தமிழ் எங்கள் உயிர் மூச்சு(40)

தேர்தல் அறிக்கைகளை இரண்டு பிரதான கட்சி இணைய தளங்களில் ஏற்றியிருக்கிறார்களா என்று பார்க்க வலம் வந்தேன்.

தி.மு.க. தனது 28 பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் (மட்டும்) வைத்திருக்கிறார்கள். (தமிழ்ப்பற்றாளர் கட்சியல்லவா அதான்!)

அ.தி.மு.க. 48 பக்க அறிக்கையை தமிழிலும், ஆங்கிலத்திலும் வைத்திருக்கிறார்கள்.

என்னாது?!(39)


mdmkonline.com

mdmkonline.com வெப்சைட் பக்கம் போனப்ப கண்ணுல பட்டுச்சு!

ம.தி.மு.க. கூட்டணியாம்!

ஹிஹி, அன்புச் சகோதரி இத பாக்கணும். அப்புறம் இருக்குது கதை!

Monday 20 April, 2009

'மேற்படியான்' மண்டயப் போட்டா வருந்துவீங்களா மாட்டீங்களா? (38)

வயசாக வயசாக கிழத்துக்கு ரொம்பவே புத்தி பேதலிச்சிடுச்சுன்னு ரொம்ப பேரு சொல்றாங்க.

அட போங்கப்பா, என்னைக்கு கிழவன் ஒழுங்கா பேசியிருக்காரு, இப்போ மாத்தி பேச.

முன்னவெல்லாம் வாரத்துக்கு ஒரு தபா அந்தர் பல்டி, இப்பவெல்லாம் நொடிக்கு ஒரு தடவ அந்தர் பல்டி.

கண்றாவி இங்கிலீஸ் புரிஞ்சு தொலைக்கலைன்னா வந்த டி.வி.காரன் கிட்ட தமிழிலே கேள்வி கேளுப்பான்னு சொல்லித் தொலைக்க வேண்டியது தானே.

இப்போ திரித்து கூறீவிட்டார்கள்ன்னு சொல்லி ஒட்டு மொத்த இந்தியாவே இந்த ஆளப் பாத்து கை கொட்டி சிரிக்குது.

அது சரி, ஒரு நபர் உயிரோடு இருக்கும் போதே அவரை கொலை செஞ்சா வருந்துவேன்னு சொல்றதையெல்லாம் என்ன செய்யலாம்?

அதே கேள்விய இவரப் பாத்து அடுத்தவங்க கேக்குறதுக்கு எம்புட்டு நேரமாவும்?

Saturday 14 March, 2009

என்னது, தொப்புள் கொடி உறவா?(37)

தொப்புள் கொடி உறவு

- இந்த ஒரு வார்த்தை கடந்த சில மாதங்களாக பாடாய்ப் பட்டு வருகிறது.

அதென்னப்பா தொப்புள் கொடி உறவு?

நாமும் தமிழ் தான் பேசுகிறோம், அவனும் தமிழ் தான் பேசுகிறான். அதனால தொப்புள் கொடி உறவு என்கிறீர்களோ?

பிரிட்டிஷ்காரனும், அமெரிக்காகாரனும் இதே ரீதியில் தான் தொப்புள் கொடி உறவு போல.

உலகத்திலே எங்கே தமிழனுக்கு பிரச்னை என்றாலும் உடனடியாக இந்த தொப்புள் கொடி உறவு டயலாக் ஆரம்பித்து விடுகிறது.

அடப்பாவிகளா.

உங்களுக்கு கஷ்ட காலம் வரும் போது தான் தொப்புள் கொடி உறவு என்று ஒன்று இருக்கிறதாக தெரிய வருகிறதா?

நல்லா சம்பாதித்து கொழிக்கும் போதெல்லாம் நம் தமிழ் இன தொப்புள் கொடி உறவுகள் அங்கே தாய்த் தமிழகத்தில் சிரமப்பட்டு வருகிறார்களே, அவர்களுக்கு உதவுவோம் என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?

மலேசியாவில், இலங்கையில், சிங்கப்பூரில் என எங்கே போனாலும் எங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களை நீங்களே மூன்றாம் தர அடிமைகளாகத் தானே நடத்தி வந்தீர்கள்?

நீங்கள் நன்றாக இருந்த காலத்தில் எங்கள் தாய்த் தமிழகத்திற்கு உங்களால் தம்படி பைசா வருமானம் உண்டா?


ஜப்பான்காரனும், அமெரிக்காகாரனும் தங்களுக்கு சம்பந்தமில்லாத ஆசிய நாடுகளில் கூட தங்கள் சொந்த காசை செலவிட்டு பாலங்கள், பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் என்று பலவற்றை செய்து கொடுத்திருக்கிறார்கள். அப்படி நீங்கள் ஏதாவது இங்கே கிழித்திருக்கிறீர்களா?

அதாகப்பட்டது நீங்கள் நன்றாக இருக்கும் காலத்தில் எங்களை கேவலமாகத் தான் பார்த்தீர்கள், பார்க்கிறீர்கள். உங்களுக்கு கஷ்டம் வரும் போது மட்டும் நாங்கள் எங்கள் கவலைகளையெல்லாம் மறந்து விட்டு உங்களௌக்கு உதவ ஓடி வர வேண்டும்.

என்னங்கப்பா நியாயம் இது?

Wednesday 11 March, 2009

தங்கபாலு எந்த விதத்தில் குறைச்சல்? (36)

காங்கிரஸ் கட்சியின் (இன்றைய) தமிழ் மாநிலத் தலைவர் தங்கபாலு, ம.தி.மு.க. தலைவர் குறித்து 'இந்தியராக இருக்க தகுதியில்லை' என்று சொன்ன கருத்து உண்மையிலேயே நகைச்சுவைக்குரிய வசனம் தான். காங்கிரஸ் கட்சியில் கோஷ்டியே கிடையாது, மஞ்சள் துண்டு அணிந்திருப்பது பகுத்தறிவுக் காரணம் தான், மருமகளின் திடீர் பெயர் மாற்றத்திற்கு காரணம் நியூமராலஜி இல்லை என்பதையெல்லாம் தாண்டிய உலக மகா ஜோக் என்பதில் மறு கருத்தில்லை.

ஆனால் உடனே 'இந்திய சர்டிபிகேட் வாங்க தங்கபாலுவை அணுகவும்' என்று சில கால்வேற்காடுகள் எழுத ஆரம்பித்து விட்டன. இது அதைத் தாண்டிய ஜோக்.

தட்சிணாமூர்த்திக்கே தமிழன் சர்ட்டிபிகேட் கொடுக்க உரிமை இருக்கும் போது தங்கபாலுவிற்கு இந்தியன் சர்ட்டிபிகேட் கொடுக்க தகுதி இருக்காதா என்ன?

Monday 2 March, 2009

நிலவரம்-1 (35)

ஏதோ ஈழத் தமிழர்களுக்கு தாங்கள் தான் வாழ்வளிக்கப்போகும் வள்ளல் போல நினைத்துக் கொண்டு ரவுடிக் கும்பல் சம்பந்தமேயில்லாமல் நீதிமன்றத்தில் புகுந்து சுப்பிரமணியசாமி மேல் முட்டை வீசியது. ஒரு முட்டை வீச்சுக்கே கை மேல் பலன் கிடைத்து 'தக்காளிச்சட்னி' அபிசேகம் வாங்கிய புகைப்படங்களைப் பார்த்து தமிழ்நாடே ரசித்தது. 'வ**ளி, வேணும்டா இவனுங்களுக்கு' என்று மகிழாதவர்களே கிடையாது. மானம்கெட்டவர்களா என்ன காவல் துறையினர்? பின்னிப் பெடலெடுத்தார்கள். சமாதானக் கொடி பறக்க விட்டானாம் நடுவில் ஒருத்தன். வெண்ணைகளா. 'இதுதான்டா போலீஸ்' என்று புரிய வைத்த காவல் துறையினருக்கு பாராட்டுகள்.
***

தமிழ்நாட்டில் ஆங்காங்கே விஷமிகளால் வன்முறை விஷவிதைகள் தூவப்படுகின்றன. ராஜீவ்காந்தியை கொலைகாரன் என்றெல்லாம் ஓரணாவுக்கு பிரயோசனமில்லாதவனெல்லாம் பேசி 'உள்ளே' போயிருக்கிறான்.

ஆனால் அந்தப் பேச்சையெல்லாம் இங்கே வலைப்பதிவில் அப்படியே பிரசுரித்தவர்களை ஒன்றும் செய்யவில்லை. சிங்கப்பூரில் உட்கார்ந்து கொண்டெல்லாம் சிலர் 'கோவி', சாரீ, கூவுகிறார்கள். பத்து நாள் முன்னாடி ஊரூக்குதான் வந்தில்ல? இங்க இருந்து குரல் கொடுக்க வேண்டியது தானே? ரொம்ப தைரியம்பா உனக்கு!

Saturday 28 February, 2009

தட்சிணாமூர்த்தியின் புலம்பல் (34)

அட, உடம்பு சரியில்லையா? பொத்திக்கிட்டு போய் வீட்டோட உட்கார வேண்டியது தானே? அதை விட்டுட்டு 'ஐயையோ, எனக்கு உடம்பு சரியில்லாத போதும் கஷ்டப்பட்டு உழைக்கிறேனே, (என்னத்த கிழிச்சாரோ), என்னைப்போய் ஊசிகளால் நெஞ்சில் குத்துகின்றனர், *ஞ்சில் குத்துகிறனர்'ன்னு என்ன புலம்பல் வேண்டிக்கிடக்கு?

Monday 23 February, 2009

இதுக்கு என்னாபா அர்த்தம்? (33)

என்னுடைய வாழ்க்கையில் அன்புக்கும், வெறுப்புக்கும் இடையே ஒரு வாய்ப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால் இங்கே இருக்கிறேன்

- ஏ.ஆர். ரஹ்மான் (எனும்) சேகர் திலீப் குமார்

Sunday 22 February, 2009

எல்லாப்புகழும் இறைவனுக்கே (32)

தமிழுக்கு(ம்) பெருமை சேர்த்த ஏ.ஆர். ரஹ்மான் என்று அழைக்கப்படும் சேகர் திலீப் குமார்க்கு வாழ்த்துக்கள்.

Congrats A. Sekhar Dilip Kumar (31)

Friday 20 February, 2009

வன்கொடுமையா? (30)

என்ன தான் கோட்டா சிஸ்டத்தில் நடு வீட்டுக்கு இழுத்து வந்து தலை வாழை இலை போட்டு சாப்பாடு போட்டாலும் திரும்பவும் கொல்லைப்பக்கத்துக்கு தானே ஓடும்?

** மன்றத்தில் உள்ளே நுழைந்து கடும் சொற்களால் தாக்கி குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்கிப் பேசிய ரவுடிகள் மறுநாள் தங்களுக்கு 'படி பூசை' கிடைக்க்ப்போகும் விஷயம் கேள்விப்பட்டு ராத்தூக்கம் இல்லாமல் உட்கார்ந்து யோசித்து 'வன்கொடுமை' தடுப்புப் புகார் கொடுக்க வந்திருக்கிறார்கள்.

புனா மானாக்களா, (புத்திசாலி என நினைத்துக் கொள்ளும் மடையன்களா என்று(ம்) அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்) கண்டபடிக்கு பேசியது நீங்கள் தானேடா? பிளாக் மெயில் கோஷ்டிகளா.

தமிழ்நாடே எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று பீலா விட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்புரம் எதுக்குடா வெண்ணைகளா ரெண்டு, மூணு சதம் இருக்கும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பயப்படுகிறீற்கள்? இவ்வளவு நாட்களாக ஊடகம் அவர்களிடம் இருக்கிறது என்று சப்பைக்கட்டு கட்டி திட்டினீர்கள். இப்போது ஊடகம் முழுதும் உங்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறதே? அப்புறம் என்னடா கவலை?

எது இருந்தாலும் நியாயம் உங்கள் பக்கம் இல்லை என்பது உங்களுக்கே புரிந்து போனதால்தான் இந்த வெறியாட்டமா? ஆடுங்கள், ஆடுங்கள், எவ்வளவு நாள் ஆட்டம் போட முடியும் பார்க்கலாம். தட்சிணாமூர்த்தியின் ஆட்சியில் வாங்கும் அடியே தாங்க முடியலையே. அடுத்து அம்மா ஆட்சி வந்தால் தெரியும்டி.

Thursday 19 February, 2009

கேடுகெட்ட இணைய தளங்கள் (29)

நக்கீரன் இணைய தளத்தில் சமீபத்திய ரவுடிகளுக்கும் போலீஸுக்கும் நீதிமன்றத்தில் நடந்த மோதலைக் குறித்து வெளியிட்டிருக்கும் கட்டுரையில், பின்னூட்டங்கள் வெள்யிடப்படுகின்றன.

அதில் ஒரு பின்னூட்டத்தை இங்கே படத்தில் பாருங்கள்.



இத்தனைக்கும் இந்த கேடுகெட்ட இணையதளத்தில் கமெண்ட்டுகளை அனுமதிக்க ஒரு இத்துப்போன 'மாடு'ரேட்டர் வேற உண்டாம்.

இதே போல thatstamilஇணைய தளத்தில் யார் வேண்டுமானாலும், எதைப்பற்றி வேண்டுமானாலும் கண்டபடி எழுதலாம். அதிலும் இந்து மதத்தைப் பற்றி, அதன் கடவுள்களைப் பற்றி, தலைவர்களைப் பற்றி என்றால் பிரச்னையே கிடையாது. ஆனால் கெட்ட வார்த்தைகள் ஏதுமின்றி துலுக்கனுங்களை கமெண்ட் அடித்தால் அதில் வெளிவராது. காரணம் அதன் எடிட்டர் ஒரு ஓடுகாலி 3/4-ஆம்.






இதெல்லாம் ஜுஜுபி. பல கமெண்ட்டுகள் மேற்படி தளத்தின் நிர்வாகிகளின் பெண்டாட்டி, தாய் மற்றும் உறவினரின் வீர தீர பராக்கிரம செயல்கள் குறித்து தெளிவாக இருக்கும். (அடுத்தவன சொல்லும் போது அந்த நாய்ங்களுக்கு இனிக்குதோ?)

இப்படியெல்லாம் ஒரு பொழப்பு தேவையாடா?


இப்படிப்பட்ட இணையதளங்களை ஊத்தி மூட வழி எதுவும் இருக்கிறதா?

விழுந்துச்சு பாரு ஒதை (28)

மவனுங்களா, ஆட்டமா போடுறீங்க?

சுலுக்கெடுத்தாச்சில்ல?

வெறுமன கைது மட்டும் பண்ணினா கலவரம் பண்ணுவானுங்க. இப்போ பாரு, முட்டை வீசினதுக்கே மண்டை ஒடஞ்சிடிச்சு.

தெய்வம் அன்னைன்னைக்கே கொல்லுதுடா வெண்ணைகளா.

சபாஷ் போலீஸ்!

Sunday 15 February, 2009

போலீஸ் Vs. சிபிஐ Vs. றா (27)

நம்ம போலீஸ், மத்திய புலனாய்வுத்துறை, றா மூணு அமைப்புக்கும் திடீர்ன்னு போட்டா போட்டி வந்திடுச்சாம். யாரு பெரிய ஆளுன்னு தெரிஞ்சுக்க.

நம்ம பெரிய மனுசங்க எல்லாம் அவங்களை கூப்பிட்டு, "இதோ பாருங்கப்பா, உங்க மூணு அமைப்புல யாரு ரொம்ப தெறமசாலின்னு கண்டுபிடிக்க ஒரு போட்டி வெக்கிறோம். அதில யாரு ஜெயிக்கிறீங்களோ, அவங்க தான் பெரிய ஆளூங்க" அப்படீன்னு சொல்லியிருக்காங்க.

போட்டி என்னான்னா, ஒரு முயலைப் புடிச்சு, காட்டுக்குள்ள விட்டுட்டாங்க. போய் தேடிக் கண்டுபுடிச்சு தூக்கியாரணும்ன்னு உத்தரவு.

முதல்ல நம்ம றா ஆளுங்க ரெடியாகியிருக்காங்க. காட்டோட மேப் வேணும்ன்னு கவர்மெண்ட்டுக்கு சொல்லி அனுப்பிட்டு, காட்டுக்கு பக்கத்தில வேற யாராச்சும் நிம்மதியா இருக்காங்களா, அவங்களை விடக்கூடாது வாங்கடான்னு கெளம்பி போயிட்டாங்க.
அங்க உள்ள ஆளுங்களை புடிச்சு அடிச்சு, "போய் முயலைப் புடிச்சிட்டு வாங்கடா"ன்னு தொந்தரவு பண்ணியிருக்காங்க. இவனுங்க என்ன நோவாம நுங்கெடுக்க ஆசப்படுறாங்களேன்னு மக்கள் ஓட்டமா ஓடிடிச்சு.

அடுத்ததா நம்ம புலனாய்வுத் துறை. ஒரு பெரிய 'அமைதி' படையை கூப்பிட்டுக்கிட்டு காட்டு உள்ளார போணாய்ங்க. அவ்வளவு தான் தெரியும். காட்டு உள்ளார இருந்து 'குய்யோ, முறையோ'ன்னு ஒரே சப்தம். காட்டுல இருக்கிற அத்தனை மிருகங்களும் பின்னாடி பக்கம் பொத்திக்கிட்டு தல தெறிக்க ஓட்டம் எடுத்துக்கிட்டு இருந்திச்சு. என்னாடான்னு விசாரணய போட்டா நம்மாளுங்க, உள்ளே புகுந்து முருகங்களையும் விடலன்னு மெசேஜ் வந்திருக்கு. தலையில அடிச்சுகிட்டு அவங்களை பாதியிலயே திரும்ப வரச்சொல்லியாச்சு.

அடுத்ததா நம்ம காவல்துறை. உள்ளே போனாங்க. அடுத்த அரை மணிநேரத்தில ஒரு மான் குட்டிய புடிச்சு தர தரன்னு அடிச்சு இழுத்திட்டு வந்தாங்க. அந்த மான் ரத்தம் வழிய, "ஐயா, நான் தான் அந்த முயல், நான் தான் அந்த முயல்" அப்படீன்னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துச்சு!

Saturday 14 February, 2009

இப்ப என்ன செய்வீங்க? (26)

இலங்கை அதிபரின் சர்வதேச தகவல் தொழில் நுட்ப ஆலோசகராக இன்போசிஸ் நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளாராம்.

இதைக் காரணம் காட்டி அவரது கம்பெனியில் வேலை பார்த்தவாறு முத்துக்குமாருக்கு அஞ்சலியை வலைப்பூக்களில் வெளியிட்டு, தமிழக அரசையும் அனைத்துக் கட்சிகளையும் தாக்கி வரும் வீரப்புலிகள் தங்கள் வேலையை ராஜினாமா செய்வார்களா?

பேச்சக் கேளு (25)

இலங்கை தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமார், தமிழர்கள் நெஞ்சில் நிறைந்துள்ளார். அவர் ஒரு கோடி விடுதலைப் புலிகளுக்குச் சமம்.

இந்த ஆண்டு எடுக்கப்படும் எல்லா தமிழ் படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களுக்கு முத்துக்குமார் பெயரை சூட்ட வேண்டும். இன்னும் ஈழப்போரில் உயிர்நீத்த மண்ணின் மைந்தர்கள் பெயரையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள், முடிந்தவரை. படங்களின் டைட்டிலில், முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி, என்ற வாசகத்தை இடம்பெற செய்ய வேண்டும்


- இன்று நடந்த பொதுக்கூட்டமொன்றில் பாரதிராஜாவின் பேச்சு.

உண்மையிலேயே அப்படி ஒரு உணர்வு இருந்தால், மொதல்ல, தினமும் இரவு ஒளிபரப்பாகும் உம்முடைய தொடரில் அப்படி போடுமய்யா பார்ப்போம்.

பேச வந்திட்டாங்க!

Friday 13 February, 2009

பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி (24)

பகுத்தறி'வியாதி' பூரண குணம் அடைய அனைத்து மதப் பிரார்த்தனையாம்.

'மஞ்ச' சாயம் வெளுத்துப் போச்சு. டும் டும் டும்.

____ -ன் வேஷம் கலஞ்சு போச்சு. டும் டும் டும்.


இதற்கு சப்பைக்கட்டு கட்ட 'உ.ப'க்களுக்கு உதவ இதோ ஒரு சமாளிப்பு


'அண்ணா' பெயரை கட்சியில் வைத்துக் கொண்டு அந்தம்மா கோயிலுக்கு போகும் போது யாராவது கேள்வி கேட்டீங்களா?

Wednesday 11 February, 2009

சுதேசி பானம் (23)


கோக், பெப்ஸி எல்லாம் எதிர்க்கும் கோஷ்ட்டியா நீங்க? இதோ உங்களுக்காகவே ஸ்பெஷலாக தயாராகிறது சுதேசி பானம் ஒன்று. விரைவில் டின்களில் அடைத்து விற்க உள்ளார்கள். காத்திருக்கவும்.

http://www.timesonline.co.uk/tol/life_and_style/food_and_drink/article5707554.ece

Sunday 8 February, 2009

எப்படீ? (22)

"உங்களையே நம்பி வந்திருக்கிற இத்தனை மக்களுக்கு நீங்க என்ன செய்யப்போறீங்க தலைவா?"

"இவ்வளவு நாளா என் கூடவே இருக்கிற உங்க மூணு பேருக்கும் என்னடா செஞ்சிருக்கேன்?"

"ஒண்ணுமே செய்யலயே"

"அதே தான்டா அவங்களுக்கும்"

- அசால்ட் ஆறுமுகம் எனும் தட்சிணாமூர்த்தி

Saturday 7 February, 2009

ஓடுகாலியின் கம்பேரிசன் (21)

மலேசிய தமிழர்கள் பிரச்னையையும், இலங்கைத் தமிழர்கள் பிரச்னையும் ஒப்பிட்டு எழுதி, மலேசியாவில் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் தமிழ் மக்களை 'இந்துத்துவாக்கள்' என்று கொச்சைப்படுத்தி, மலேசியாவில் தமிழர்கள் 'அந்த அளவிற்கா' கஷ்டப்படுகிறார்கள்? என்று கேள்வியை எழுப்பியிருக்கிறது ஒரு ஓடுகாலி. (அவர்களை 'மேற்படி மதத்தில் ஒரிஜினலாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். 'இங்கிருந்து' ஓடிப்போனதால் அவர்களை 'ஓடுகாலி' என்று அழைப்பது பொருத்தம் தான்).

ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுவுதாம். இலங்கைத் தமிழர்கள் பிரச்னை இப்படி நடந்து கோண்டிருக்கும் போது அதே இலங்கையில் சகல சர்வ ஆக்கியங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த ஓடு காலி கும்பல் குறித்து அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இங்கேயே ஒரு மக்கள் பிரதிநிதி இலங்கை சர்வாதிகாரியை தனது உற்ற தோழன் என்று பீலா விட்டுக்கொண்டிருப்பது தெரியவில்லையா?

இலங்கை போராடத்தில் எந்த ஓடுகாலியாவது ஒரு பதிவு எழுதியிருக்கிறதா?

இப்போது மலேசிய தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதன் ஒரே நோக்கம் 'ஓடுகாலி' இனப்பாசம் தான். 'மேற்படி' மத நாடு மலேசியா. அதான் காரணம்.

Thursday 5 February, 2009

இவங்களையா மக்களே நம்புறீங்க?(20)




* 1956ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் நடை பெற்ற சிதம்பரம் கழகப் பொதுக் குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காக நான் முன்மொழிந்த தீர்மானம், 1958ஆம் ஆண்டு இலங்கையில் உரிமைகள் பறிக்கப்படுகின்ற தமிழின மக்களுக்காக பேரறிஞர் அண்ணா தலைமையில் ஒரு மாபெரும் பேரணியை தி.மு.க. நடத்தியதைத் தொடர்ந்து இந்தப் பட்டியல் இங்கே இடம் பெறு கிறது.

* 24.8.1977 அன்று சென்னை யிலே 5 லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணி. கோரிக்கை வைக்காமலே அனைத்துக் கடை களும் அன்று சென்னையில் மூடப் பட்டன.

* 13௮௧981 அன்று பிரத மருக்கு இலங்கையிலே நடைபெறும் கொடுமை குறித்து தந்தி அனுப்பினேன்.

* 18.8.1981 அன்று பிரதமருக்கும், வெளி உறவுத் துறை அமைச்சருக்கும் தந்தி கொடுத்தேன்.

* 21.8.1981 அன்று சட்ட சபையில் அரசின் சார்பில் கொண்டு வரப் பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றி னேன்.

* 29.8.1981 அன்று தி.மு.க. கண்டனப் பேரணி - அரசு தடை - தடையை மீறி ஊர்வலம் - 250 பேர் கைது.

* 2.9.1981 அன்று சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்.

* 3.9.1981 முதல் சென்னையில் அன்றாடம் தடை மீறி ஊர்வலம் - இலங்கைத் தூதுவரது அலுவலகம் முன்பு மறியல்.

* 15.9.1981 தடையை மீறி ஊர்வலம் புறப்பட்ட நான் கைது.

* 27.7.1983 சென்னை யில் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி

* 28.7.1983 தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி.

* 2.8.1983 அனைத்துக் கட்சிகள் நடத்திய முழு அடைப்பு.

* 4.8.1983 மத்திய அரசு அலுவலகங்களின் முன்னால் கறுப்புச் சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம். தமிழர் வீடுகள், கடைகள், அலுவலகங்கள், தொழில கங்கள், வாகனங்கள் அனைத்திலும் கறுப்புக் கொடி.

* 5.8.1983 அன்று தமிழகம் முழுவதும் ரயில் நிறுத்த அறப் போராட்டம்.

* 11, 12, 13, 14.8.1983 தமிழகம் முழுவதும் கண்ட னக் கூட்டங்கள்.

* 10.8.1983 நானும் பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்.

* 1983 ஆகஸ்ட் முதல் - இரண்டு கோடி கையெ ழுத்துக்கள் பெற்று ஐ.நா. மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

* 8.8.1983 டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர் கள் உண்ணாநோன்பு.

* 10.8.1983 அன்று நானும், பொதுச் செயலாளர் பேராசிரியரும் எங்களுடைய சட்ட மன்ற உறுப்பினர் பதவி களை ராஜினாமா செய் தோம்.

* 85ஆம் ஆண்டு மார்ச் 29 முதல் ஒரு மாத காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் சென்று இலங்கைத் தமிழர் இன்னல் குறித்து விளக்கம் அளிக்கப் பட்டது. ஒரு மாத காலத்திற்கு விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

* ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.கழகப் பொதுக்குழு முடிவின்படி 29.4.1985 அன்று சென்னை யில் நடைபெற்ற மறியலில் 4002 பேரும், 30ஆம் தேதி திருச்சியில் 3000 பேரும், மே 3ம் தேதி தர்மபுரியில் 1000 பேரும், 6ம் தேதி சேலத்தில் 3000 பேரும், 7ம் தேதி தஞ்சையில் 6000 பேரும், 8ம் தேதி வட ஆர்க்காட்டில் 2500 பேரும், 13ம் தேதி தென் ஆர்க்காட்டில் 3000 பேரும், 15ம் தேதி பெரியார் மாவட்டத்தில் 1500 பேரும், 16ம் தேதி செங்கை அண்ணா மாவட்டத் தில் 3000 பேரும், 17ம் தேதி கோவை நீலகிரி மாவட்டங்களில் 3500 பேரும்,18ம் தேதி ராமனாதபுரம், பசும்பொன், காமராஜர் மாவட்டங்களில் 3000 பேரும், 20ம் தேதி மதுரை மாவட்டத்தில் 5000 பேரும், 22ம் தேதி நெல்லை, குமரி, புதுவையில் 5500 பேரும் ஈடுபட்டு கைதாகினர்.

* 16.5.1985 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு கைதானேன்.

* 23.8.1985 அன்று சந்திரஹாசன், பால சிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து சென்னையில் "டெசோ'' அமைப்பின் சார்பில் பேரணி. பேரணி முடிவில் நாடு கடத்தும் காரியம் நிறுத்தப் படாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அறிவித்து, அதனையொட்டி நாடு கடத்தல் உத்தரவு உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது.

* 30.8.1985 அன்று தமிழகத் தில் வேலை நிறுத்தப் போராட் டம். ஆயிரக் கணக்கானவர்கள் கைது.

* டெசோ அமைப்பின் சார்பில் அக்டோபர் 3ம் தேதி கோவையிலும், 4ம் தேதி திண்டுக்கல்லிலும், 5ம் தேதி தூத்துக்குடியிலும், 6ம் தேதி திருச்சியிலும், 7ம் தேதி சேலத்திலும், 13ம் தேதி வேலூரிலும் மிகப் பிரமாண்ட மான பேரணிகளும், கூட்டங் களும் நடைபெற்றன.

* 4.5.1986 அன்று மதுரையில் "டெசோ'' அமைப்பின் சார்பில் அகில இந்தியத் தலைவர்களை யெல்லாம் அழைத்து மாநாடு. பொதுக் கூட்டம்.

* 31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு - கறுப்புச் சின்னம் அணிந்து கண்டன ஊர்வலங்கள் - பொதுக் கூட்டங்கள்.

* 3.6.1986 அன்று என்னு டைய பிறந்த நாள் விழா ரத்து செய்யப்பட்டு, போராளி இயக்கங்களுக்காக உண்டியல் மூலம் நிதி வசூலித்துக் கொடுத்த நிகழ்ச்சி.

* 1987ஆம் ஆண்டு அக்டோபரில் பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகள் கொடுக்கப்பட்டன.

* 1987ஆம் ஆண்டு அக்டோ பர் 15ஆம் தேதி தி.மு.க. நடத்திய பேரணி

* 16.10.1987 அன்று தளபதி கிட்டுவைக் காணச் சென்ற வைகோ கைது செய்யப்பட்ட தற்காக கண்டன அறிக்கை.

* இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக எட்டு மாநில முதல் அமைச்சர் களுக்கும் இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன்.

* 17.10.1987 அன்று கிட்டுவைச் சந்திக்கச் சென்ற ஆர்க்காடு வீராசாமி, என்.வி.என். சோமு கைது.

* 22.10.1987 அன்று சென்னையில் இந்தியாவின் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்டம்.

* 24.10.1987 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டம். தொடர்ந்து மறியல் போராட்டம் - பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கழகத்தினர் கைது.

* 6.11.1987 அன்று சென்னை யில் ஈழத் தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கட்சியினர், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் கலந்து கொண்ட மனிதச் சங்கிலி.

* 11.11.1987 தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி

* 15.3.1989 டெல்லியில் பிரதமர் ராஜீவ் காந்தி இரண்டு முறை சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தேன்.

* 2.5.1989 அன்று பிரதமர் ராஜீவ் காந்தி முரசொலி மாறனுக்கு இலங்கைப் பிரச்சினை குறித்து நீண்ட கடிதம். 15.5.1989 அன்று முரசொலி மாறன் பிரதமர் ராஜீவுக்கு பதில் கடிதம்.

* 15.6.1989 அன்று சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜிவ் காந்தியுடன் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசினேன்.

* 15, 16.12.1989 ஆகிய நாட்களில் விடுதலைப் புலிக ளின் பிரதிநிதிகளான பாலசிங்கம், யோகி ஆகியோரு டன் சந்திப்பு.

* 20.12.1989 அன்று பிரதமருடன் சந்திப்பு.

* 4.1.1990 பல்வேறு போரா ளிக் குழுவினருடன் பிரதமர் கூறியதின் பேரில் சந்திப்பு.

* 1991ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக் காக கழக ஆட்சி கலைக்கப் பட்டது.

* 17.7.1995 அன்று ஒவ் வொரு நகரத்திலும் கழகத்தினர் கறுப்புச் சின்னம் அணிந்து உண்ணா நோன்பு.

* 2.11.1995 அன்று சென்னையில் கறுப்புக் கொடி ஏந்திய பேரணி

* 3.11.1995 அன்று மாவட்ட தலைநகரங்களில் கறுப்புக் கொடி பேரணி

* தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் 25 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர் களுக்கு மருத்துவ உதவி அளிக்க நிதி.

* 30.11.1995 முழு அடைப்பு.



__________________

இவ்வளவு வருஷமா இவ்வளவு செஞ்சும் - அதாவது செஞ்சதா சொல்லியும் - (அதாவது 56-ம் வருஷத்திலிருந்து 55 வருஷமா இவ்வளவு செஞ்சும் ஒரு ம*ரையும் புடுங்க முடியல. இன்னுமா இந்தாளை நம்புறீங்க?

காணவில்லை(19)

Wednesday 4 February, 2009

ஹர்த்தால் பிசிபிசுத்திடுச்சாம்(18)

தினமலர் பத்திரிகை நம்ம தட்சிணாமூர்த்தியை விட பயங்கர கப்ஸாவாக இருக்கும் போலிருக்கிறது.

நேற்றைய பந்த், சரி, ஹர்த்தாலின் போது தமிழகத்தில் 100 சதவிகிதம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று இன்றைக்கு செய்தி வெளியிட்டிருக்கிறது

அவனவன் வூட்டுக்குள்ளே உட்காந்து இருந்தான். அநேகமா அடுத்த பத்து மாசத்தில தமிழ்நாட்டில ஜனத் தொகை அதிகமானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல. போதாக்குறைக்கு நம்ம 'போர்க்காட்டார்' வேற ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிச்சு கரண்ட் கட் பண்ணியிருந்தாரு. (இல்லைன்னா மட்டும் அப்படியே 24 மணி நேரமும் கரண்ட் வந்திடும்!)

ஒருவேளை தினமலரை வளைகுடாநாடுகளில் இருந்து பிரிண்ட் பண்ணுறாங்களோ?

Tuesday 3 February, 2009

ஊருக்கு உபதேசம் (17)

இன்றைக்கு பந்த், இல்லை இல்லை, ஹர்த்தால், அட இல்லை, பொது வேலை நிறுத்தம். எதோ ஒரு கண்றாவி.

நேற்றைக்கே பல இடங்களில் வெள்ளியும் சொள்ளையுமாக ஆட்கள் வந்து அன்பாக கடையை மூடி விடும்படி கேட்டுவிட்டு போயிருக்கிறார்கள்.

எல்லாம் சரி.

நம்ம வலைப்பூ எலிகள் பந்தை முன்னிட்டு ஒரு நாளைக்கு பதிவு, பின்னூட்டங்கள் போடாமல் இருந்து ஹர்த்தாலில் கலந்து கோன்டால் என்ன?

Sunday 1 February, 2009

இஸ்ரோ சாட்டிலைட் பணால் (16)

ஐரோ‌ப்‌பியாவின் யூடெ‌ல்சா‌ட் என்ற ‌நிறுவன‌த்துக்காக கடந்த மாதம் 20ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்திய டபிள்யு.டு.எம் செயற்கைகோள் செயலிழந்துவிட்டதாக தெரிகிறது. இதை சரி செய்யும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இது இ‌ஸ்ரோ‌வின் வளர்ச்சிக்கு பி‌ன்னடைவாக கருத‌ப்படு‌கிறது.

இஸ்ரோ கடந்த 2006ல் ஐரோப்பாவின் ஈ.ஏ.டி.எஸ் என்ற நிறுவனத்துக்கு வர்த்தக ரீதியான செயற்கை கோள் ஒன்றை வடிவமைத்து செயல்படுத்தி தர ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதன்படி கட‌ந்த டிச‌ம்ப‌ர் 20ஆ‌ம் தே‌தி டபிள்யு.டு.எம் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. இந்நிலையில் கடந்த ஜனவரி 22ம் தேதி இரவிலிருந்து இது செயல்படவில்லை. தங்களின் சேவைகளை அது பூர்த்தி செய்யவில்லை. அது முற்றிலும் செயலிழந்துவிட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது


சம்பந்தப்பட்ட சாட்டிலைட் வெற்றிகரமாக ஏவப்படும்போதெல்லாம் கூப்பிட்டு பாராட்டப்படும் விஞ்ஞானிகளை இப்போது கூப்பிட்டு திட்டலாமா?

நம்மூர் ரோடு கூட ரெண்டு மூணு மாசம் தாங்குமய்யா. இவ்வளவு செலவு செஞ்சு விட்ட ராக்கெட்டு பத்து நாளிலேயே புட்டுக்கிச்சே?

பந்த் Vs. ஹர்த்தால் (15)

நியூஸ் பேப்பரை படிச்ச உடனே தலை கிர்ருன்னு சுத்துதுப்பா.

பந்த்ன்னா என்ன ஹர்த்தால்ன்னா என்னன்னு யாராச்சும் தூய தமிழிலே விளக்கம் கொடுங்களேன்.

இன்னைக்கு ம.வெ. ராமதாசூ ஒரு விளக்கம் கொடுத்திருக்காரு. அத படிச்ச உடனே நம்ம தட்சிணாமூர்த்தி நொந்து நூடுல்ஸ் ஆயிருப்பாருன்றது சர்வ நிச்சயம்.

"அடப்பாவிகளா, தூய தமிழ்ன்னு நாம தான் இவ்வளவு நாள் ப்லிம் காட்டிக்கிட்டிருந்தோம், இந்தாளு நமக்கே ஓவர் ப்லிம் காட்டுரானே"ன்னு பொலம்பித்தள்ளியிருப்பாரு.

http://thatstamil.oneindia.in/news/2009/02/02/tn-we-are-holding-hartal-not-bandh-ramadoss.html

http://thatstamil.oneindia.in/news/2009/02/01/tn-govt-says-bandh-is-illegal.html

Saturday 31 January, 2009

'துர்கா' போய் 'சாந்தா'(14)

எனக்குத் தெரிந்த ஒருவரின் மனைவியின் பெயர் 'துர்கா'. அவருக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகி விட்டன. பேரக்குழந்தைகுளும் பிறந்தாச்சு. இப்போது திடீரென சொல்லாமல் கொள்ளாமல், மனைவியின் பெயரை 'சாந்தா' என்று மாற்றிவிட்டிருக்கிறார்.

இது தெரியாமல் 'இது யாருப்பா சாந்தா? ரெண்டாவது கல்யாணம் கட்டியாச்சா?' என்று கேட்டேன்.

'அதெல்லாம் இல்லை. துர்கா என்பது பல ஆயுதங்களை தாங்கி நிற்கும் கடவுளின் பெயர். அதை மாற்றி சாந்தமான அம்மனின் பெயர் வேண்டும் என்று என்னுடைய தந்தை விருப்பப்பட்டார். அதனால் தான் மாற்றியிருக்கிறேன்' என்றார் நண்பர்.

அவரது தந்தை ஒரு பகுத்தறிவு'வியாதி'. எனவே அப்படி சொல்லியிருப்பதில் வியப்பில்லை!

'பகுத்தறிவில இதெல்லாம் சாதாரணமப்பா!

Friday 30 January, 2009

கெளப்புங்கடா காவிரி, ஒகேனக்கல் பிரச்னையை (13)

இந்த கர்நாடகா காரணங்களுக்கு ரொம்பவே நக்கல் ஜாஸ்தி. அவனவன் - முக்கியமா நம்ம போர்க்காட்டார் - இங்கே ஒரு மணி நேர மின்சாரத்துக்கே சிங்கி அடிச்சுக்கிட்டு இருக்காரு. அவங்க என்னடான்னா 24 மணி நேரமும் மின்சாரம், அதுவும் கிராமங்களுக்கும் அப்படீன்னு சொல்லி வயித்தேறிச்சலை கெளப்பறானுங்க.

http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=6756&cls=row4&ncat=IN

அவனுங்கள விடக்கூடாது. கெளப்புங்கடா காவிரி, ஒகேனக்கல் பிரச்னையை!

Thursday 29 January, 2009

பத்திரிகையாளரா? (12)

இலங்கையில் நடக்கும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கே ஒரு உயிர் தன்னையே மாய்த்துக் கொண்டிருக்கிறது. வருத்தமான நிகழ்வு தான்.

அதை உடனடியாக வெளியிட்டுள்ள 'ஹிந்து' பத்திரிகை, "தமிழ் பத்திரிகை அலுவல ஊழியர் மரணம்" என்று உள் செய்தியிட்டு 'ஒரு மனிதன் தற்கொலை' என்று செய்தி வெள்யிட்டுள்ளது.

அதையும் கூட தவறு என்று சில மன நோயாளிகள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

அவர் பத்திரிகை அலுவலகத்தில் டி.டி.பி. ஆப்பரேட்டராக பணி புரிந்தவர் தானே? அவர் எப்படி பத்திரிகையாளராக முடியும்?

அப்படியெனில் கருணாநிதிக்கு காரோட்டுபவரும், அவர் வீட்டு வாட்ச் மேனும் கூட அரசியல்வாதி / முதல்வர் என்று சொல்லிக் கொள்ளலாமா?!

போங்கடா நீங்களும் உங்க நியாயமும்!

Wednesday 28 January, 2009

எமது அடுத்த வெளியீடு : மவுன விரதம் (11)

ஏற்கனவே எங்காளுல ஒருத்தரு நாலு நாள் சாவும் வரை உண்ணாவிரதம் இருந்ததிலயே இலங்கை அரசாங்கம் ஆடிப்போயிடிச்சு தெரியுமில்ல?

இப்போ போதாக்குறைக்கு நாங்க ஒரு ஏழெட்டு பேரு சேர்ந்து மவுன விரதம் இருக்கப் போறோம். அப்போ பாருங்க ஐ.நா. சபையே நடு நடுங்கும். கிடு கிடுக்கும்.

(அடப்போங்கய்யா வெண்ணைகளா, அந்த மவுன விரதத்தை தான் பல நாளா தட்சிணாமூர்த்தி இருக்காரே!)

முனிசிபாலிட்டி யானை பொழச்சிடுச்சாம் (10)


Safe home

இலங்கை (9)

இலங்கையில் அப்பாவி பொதுமக்களை அநியாயமாக சாகடிக்கும் ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அநியாயவாதிகளுக்கு கடும் கண்டனங்கள்.

நாகரிகம் தெரியாத கம்னாட்டிகள் (8)

முன்னாள் ஜனாதிபதி திரு ஆர். வெங்கட்ராமன் மறைந்து விட்டார். அவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் பேர்வழி என்று சில கபோதிகள் கன்னாபின்னாவென்று கிறுக்கியிருக்கிறார்கள். ஒருவன் எவனோ எதையோ சொன்னான் என்று சொல்லி அவரை திட்டியிருக்கிறான். கேட்டால், "நம் நாட்டில் தான் இறந்து விட்டால் புகழ வேண்டும் என்று சொல்கிறார்கள்" என்று பதில் வேறு. ஏன்டா வெண்ணை, நீ இருக்கிறது நம் நாட்டில் தானேடா? மேலை நாடுகளில் ஒருத்தி பலரோடு போவாள் என்று உன் அம்மாவையோ, சகோதரியையோ, மனைவியையோ சொல்லுவியா? நம்மூரில் இருக்கும் போது நம்மூரில் என்ன பழக்கமோ அதைத் தான் செய்ய வேண்டும். எவனோ சொன்னதை கிறுக்கியிருக்கான் பாடு. அந்த எவனோ கபோதி உன் குடும்பத்தினரைப் பற்றி கேவலமாக சொன்னான். அதையும் எழுதேன்.

இன்னொருத்தனோ அவர் பிராமணர் என்பதினாலேயே தரக்குறைவாக எழுதியிருந்தான். நேரம் தான்.

பன்றிகளுக்குத் தெரியுமா பன்னீர் வாசனை?

Friday 23 January, 2009

தட்சிணாமூர்த்தியும் அறிக்கை ஸ்டண்ட்டும் (7)

நாளையே அத்தைக்கு மீசை முளைக்கும் - அதுவும் தேவாரம், வீரப்பன், கோபால் போல பெரிதாக முளைக்கும் என்று யாராவது வாக்குறுதி அளிப்பார்களேயானால் அடுத்த நிமிடமே ஆட்சியை துறக்கத் தயார் என்று தட்சிணாமூர்த்தி அறிவித்துள்ளார்.

இதற்கு வழக்கம் போல அல்லக்கைகள் 'சூப்பருப்பா, ஆட்சியே போனாலும் பரவாயில்லன்னு அறிக்கை விட்டுட்டாருப்பா' என்று புளகாங்கிதம் அடைந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சிந்தனைத் திறன் அம்புட்டு தான்.

வேறென்ன சொல்ல?!

Thursday 22 January, 2009

தட்சிணாமூர்த்தியும் ஆங்கிலப் பிறந்தநாளும்(6)

மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ் என்று சொல்லி கஞ்சி குடித்துக் கோண்டிருக்கும் தட்சிணாமூர்த்தி தனது பிறந்த நாளை மட்டும் ஆங்கிலத் தேதிப்படி கொண்டாடுவது ஏன் என்று நியாயமான கேள்விக்கு பதில் தர முடியாத வக்கில்லாத அல்லக்கைகள் 'அம்மையார் மட்டும் அப்படிக் கொண்டாடலாமா?' என்று வழக்கமான பதில் கேள்வி எழுப்பி தங்களது அழுக்குப் புத்தியை மீண்டும் காண்பித்திருக்கிறார்கள்.


கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க பன்னாடைங்களா.

Wednesday 21 January, 2009

சம்திங் ராங்க்! (5)

ஒரு பொம்பளையும் பொம்பளையும் சேர்ந்து இருந்தா கண்டபடி பேசுறானுங்களே. அதுவே சதா சர்வகாலமும் கூடவே ஒரு ஆளு தேவைப்பட்டுகிட்டே இருக்கே? 'உங்க சாவகாசமே வேணாம்னு' சொல்லிட்டு ஓடிப்போற ஆளக்கூட கூடவே போய் கெஞ்சி கூத்தாடி திரும்ப கொண்டு வர்றாங்களே. அது ஏன்னு யாராச்சும் கேள்வி கேக்குறீங்களா? சம்திங் ராங்க்!

கேள்வி(யும் நானே), பதில்(-ம் நானே) (4)

பத்திரிகையாளர்களை என்ன தான் திட்டினாலும், காறித் துப்பினாலும், நீதான்டா கொலைகாரன் என்று புழுதி வாறித் தூற்றினாலும் அவர்கள் எதற்கும் அசராமல் அடுத்த தபா பார்க்கும் போது என்னை கோபமூட்டும்படியான கேள்விகளை கேட்டுத் தொலைக்கிறார்கள். பத்திரிகையாளர்களுக்கு நான் ரொம்ப நெருக்கம் என்ற ஒரு இமேஜை என்னுடைய அல்லைக்கை பத்திரிகையாளர்களைக் கொண்டு உருவாக்கி வைத்திருக்கிறேன். இருந்தாலும் அதெல்லாம் செல்லுபடியாகவில்லை. எனவே அடிக்கடி, அதுவும் எனக்கு பிரச்னை என்று வரும் போதெல்லாம் எனக்கு நானே கேள்வி கேட்டு அதற்கு பதிலாக அனைவரையும் திட்டி எழுதுவேன் என்று அறிவித்துக் கொள்கிறேன்.

நேரடியாக பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதெல்லாம் நான் டென்ஷனாகிவிடுவதால் இந்த ஏற்பாடு. ஆனால் நான் பத்திரிகையாளர்களுக்கு ரொம்ப நெருக்கமாக்கும்!

Monday 19 January, 2009

டேட்டா பேஸ் (3)

நாட்டுல இருக்கிற அத்தனை கட்சியிலயும் இருக்கிற அத்தனை பேரோட ஜாதி என்ன அவங்க குலம், கோத்திரம் என்னன்னு எனக்கு ஒரு லிஸ்டு வேணும்ப்பா. நான் ஒரு பகுத்தறிவாதி. எனக்கு இந்த ஜாதி, மதமெல்லாம் கிடையாது. என் போன்டாட்டி என்னோட ஜாதியாவே இருக்கிறது என்னோட தப்பில்ல. எங்க ஊட்டுல கட்டி வெச்சிட்டாங்க. என்னோட நாலாவது வைப்பாட்டி ஒரு தாழ்ந்த ஜாதிக்காரர் தான். என்னோட ரெண்டாவது துணைவியோட மூத்த பையன் சம்சாரம் எங்க சாதின்னு சொன்னாலும், அவங்களோட பையன் கட்டிக்கிட்டது ஒரு ஐயர் பொண்ணைத் தான். எதுக்கு சொல்ல வர்ரேன்னா, எனக்கு இந்த ஜாதி வித்தியாசம் பாக்குறது எல்லாம் புடிக்கவே புடிக்காது. ஆனா நாளைக்கே நடிகனாகி, அரசியல்வாதியாகிட்டா எதிர்கட்சிக்காரன்களை திட்டி கவிதை எழுதணும். அதுக்காக அவங்க எந்த ஜாதின்னு ஒரு லிஸ்ட் வேணும். தயார் பண்ணி அனுப்பூங்கப்பா.

என்ன செய்யலாம்? (2)

அ.இ.க.ச.மா.மு.க. க.க.அ.ர.க.ம.க. ப.அ.க.உஎ.க.டு.ம.க ல.க.ரு.க.ம.க ட.டொ.டி.டை.டூ.க மு.பு.கொ.எ.க - கட்சி ஆரம்பிச்சா பேரு வைக்கணுமில்ல.

பொம்பள கொழந்தையா இருந்தா பிரேமா, அடடே ஆம்பளக் கொழந்தையா பிரேமானந்தான்னு வையின்னு சொல்லிட்டு போவ இது என்ன தொண்டனோட கட்சியா? மண்டய பிச்சுகிட்டு உட்காந்திருக்கேன் மக்கா. மச்சான், மாப்ளே, தங்கமணி, அவங்க சொந்தக்காரங்க எல்லாரையும் கூப்பிட்டு பொதுக்குழுவில விசாரணைய வெச்சு கட்சிக்கு பேரு யோசிக்கணும்பா.

என் மயிரினும் கீழான மக்களே.

உங்கள் மீது என் மயிரின் மீது வைத்திருக்கும் மதிப்பை விட பல அளவு கீழாகத்தான் வைத்திருக்கிறேன். 

ஆமாம்.

ஒரு நாளைக்கு பல முறை பார்த்து பார்த்து தலை வாறிக்கொள்கிறேன். அதை விட உங்கள் மீது மதிப்பு அதிகம் வைத்தால் நயா பைசாவிற்கு பிரயோசனம் உண்டா என்ன?

கூடிய சீக்கிரம் நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன். இரண்டு படங்கள் ஊத்திக் கொண்டவுடன் அரசியலில் குதிக்கப் போகிறேன். அரசியல் சாக்கடையை சுத்தப் படுத்தப் போகிறேன். எப்படி என்பதை இப்போது சொல்ல மாட்டேன். அதை சொல்லிவிட்டால் அனைத்து கட்சியினரும் அதை காப்பி அடித்து விடுவார்கள்.

அரசியலில் பப்பு வேகாவிட்டால் இருக்கவே இருக்கிறது உலகத் தமிழர்கள் பிரச்னை. தமிழனுக்கு எங்கே தான் பிரச்னை இல்லை? உள்ளூர்த் தமிழர்கள் எல்லாம் குலு குலுவென வாழ்ந்து வருவதால் சர்வதேச தமிழர்கள் பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் பிரச்னைக்காக சாகும் வரை உண்ணாவிரதம் நான்கு நாட்கள் நடத்தப் போகிறேன். அதற்கும் சரிவராவிட்டால் உள்ளூர் பஸ்களை உடைப்போம், ரயிலை நிப்பாட்டுவோம், சகஜ நிலையை நாசமாக்குவோம். உள்ளூர்த் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி போனால் என்ன, எங்களுக்கு தேவை உலகத் தமிழர்களின் நிம்மதி மட்டும் தான். முதல் பதிவுக்கு இவ்வளவு போதும், மீதியை விரைவில் பார்ப்போம்.