Thursday 21 May, 2009

அகதி முகாமில அந்தாளை தள்ளுங்கப்பா(45)

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் சிறப்புப் பிரதிநிதியாக கொழும்பு வந்துள்ள விஜய் நம்பியார், இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக இலங்கை அரசு அமைத்துக கொடுத்துள்ள முகாம்களில் சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக பாராட்டித் தள்ளியுள்ளார்.

போர் முனையில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காக பான் கி மூனால் சில நாட்களுக்கு முன்பு கொழும்புக்கு அனுப்பப்பட்டிருந்தார் விஜய் நம்பியார். ஆனால் இவர் வந்து சேருவதற்குள்ளாகவே (நியூயார்க்கிலிருந்து நேராக கொழும்புக்கு வராமல் இடையி்ல் டெல்லி சென்று விட்டு கொழும்புக்கு வந்தார் விஜய் நம்பியார்) வன்னிப் பகுதியில் அனைத்தையும் முடித்து விட்டது இலங்கை ராணுவம் .

இந் நிலையில், மாணிக் பார்ம் பகுதியில் உள்ள இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களை விஜய் நம்பியார் பார்வையிட்டார்.

அப்போது இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நல்வாழ்வு நடவடிக்கைகள், பிற திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாராம்.

அப்போது முகாம்களில் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக பாராட்டு தெரிவித்தாராம் விஜய் நம்பியார்.

விஜய் நம்பியாரின் சகோதரர்தான் சதீஷ் நம்பியார். இவர் ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தனே இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை சென்ற இந்திய அமைதி காக்கும் படையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் என்பது நினைவுகூறத்தக்கது.

செய்தி நன்றி : thatstamil.com

****

இந்தாளை ஒரு வாரத்துக்கு அகதி முகாமிலே உட்கார வெச்சு சாப்பிட்டு தூங்க சொல்லுங்கப்பா. அதான் நல்லா இருக்குன்னு அவரே சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காரே!

No comments: