Sunday 26 April, 2009

தட்சிணாமூர்த்தியின் நகைச்சுவை உண்ணாவிரதம் (41)

"தலைவரே, மோசம் போயிட்டோம்"

"என்னய்யா அது?"

"உளவுத் துறை ரிப்போர்ட்படி நமக்கு நாப்பதுலயும் நாமம் தானாம்"

"என்னய்யா சொல்ற?"

"ஆமாம். சாதாரணமாவே நம்ம ஆட்சி மேல மக்களுக்கு ஏகக் கடுப்பு. கடைசியா இலங்கை பிரச்னை வேற இப்போ ரொம்பவே ஆட்டிப்படைக்குது"

"இப்படி ஆவும்னு முன்னமே தெரிஞ்சிருத்ந்தா 'நாங்க ஆட்சிக்கு வந்தா தனி ஈழம் அமைய ஆதரவளிப்போம்னு' சொன்ன ஆண்டிப் பண்டார கட்சிக்கிட்ட ஓடியிருக்கலாமேய்யா"

"ஹூம். டூ லேட் தலைவரே. அந்தம்மா தானாவே அந்த அறிக்கையெல்லாம் விட்டுடிச்சி. நீங்க என்னடான்னா 'நண்பரு. துரோகி, போராளி, பெருச்சாளின்னு' காமெடி பண்ணிட்டு இருக்கீங்க. நீங்க பண்ற காமெடியினால வடிவேலுவுக்கு இப்போவெல்லாம் படத்துலே சான்ஸே கெடைக்கலயாம். எப்பவும் ஆட்சி போனப்புறம் படத்துக்கு வசனம் எழுதுறேன் பேர்வழின்னு படுத்தி எறிவீங்க. இனிமே காமெடியனா நடிங்க. சூப்பரா பொருந்திடும்"

"என்னய்யா செய்யலாம்?"

"பேசாம கூட்டணியில இருந்து வெளில வந்திடுங்க. ரெண்டு மூணு சீட்டாவது ஜெயிக்கலாம். புள்ள, பேரனெல்லாம் டெபாசிட் காலியானா நல்லாவா இருக்கும்?"

"இனிமே வர முடியாதேய்யா"

"உங்களுக்கா தெரியாது? உண்ணாவிரதம் இருக்கேன்னு உட்காந்திடுங்க. அவங்களாவே தொறத்திடுவாங்க. 'ஐயையோ.. கொல்றாங்களே'ன்னு சவுண்டு விட்டுக்கலாம்"

"சூப்பர் ஐடியாய்யா. வாழ்க்கையிலயே இப்போ தான் உருப்படியா ஒரு யோசனை சொல்லிருக்க"

'ஐயையோ கொல்றாங்களே.. ஐயையோ கொல்றாங்களே' - சப்தத்தைக் கேட்டு உடனடியாக இத்துப் போன டி.வி & பேரன் டி.வி.களில் 'அராஜக மத்திய அரசு அட்டகாசம்' என்று செய்தி ஓடுகிறது.

3 comments:

Anonymous said...

ஈழத்தமிழன்.. ஊறுகாய்

தரமானது .தன்னிகரில்லாதது..தொட்டு நக்கிப்பாருங்கள் .. நக்க.. நக்க.. நாவூறும்...
நக்கியவர்களிற்கு .. வாயூறும்.....வாயூறியவர்களிற்கு பதவி போதையூறும்.

இந்திய அரசியல் வியாபாரத்தில் இன்று ஈழத் தமிழனும்.. அவனது அவலவாழ்வும்தான் ஊறுகாய்...எதிர்கிறவன் ஆதரிக்கிறவன்.. உதவ வேண்டும் என்கிறவன்... உதைக்கவேண்டும் என்கிறவன்....ஆயுததத்தை அள்ளிக்கொடுத்து அழி...என்றுவிட்டு அகிம்சை தேசம் என்கிறவன்... அண்ணா நாமம் வாழ்க என்கிறவன்.. சிறுத்தை என்று விட்டு மியாவ்....என்பவன். ..பாட்டாளிகளிற்கு படம் காட்டுபவன்...குண்டு கோமளவல்லிக்கு குடை பிடித்தும் குறைந்த இடம் பிடித்தவன்..பக்கத்துக்கு வீட்டுகாரனுக்கு பிறந்த இந்த கமெண்ட்டை எழுதிய அனாநி எல்லோருமே தொட்டுக்கொள்கிற ஊறுகாய்தான்.. ஈழத்தமிழன் வாழ்வு.... தமிழகத்தில் அரசியல் சாண(ந)க்கியங்களை அழகாகவே அரங்கேறுகின்றன.

Anonymous said...

நீங்க என்ன புடுங்கினாலும் கலைஞரை தோற்கடிக்க முடியாது. ஏற்கனவே முதல் கட்ட பண பட்டுவாடா முடிஞ்சது. 25லிருந்து 30 தொகுதிகள் திமுக கூட்டணிக்கு நிச்சயம்.

நக்கி பிழைங்கோ நாய்களே

டுபாகூர் மன்னன் said...

ஹிஹி. யாரு நக்கின்னு தான் உலகத்துக்குமே தெரியுமேடாப்பா பிரியாணி குஞ்சு.